வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது என, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், தவெக அரசின் வெள்ளை அறிக்கையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், இந்த பாதிப்புகளை சரிசெய்ய தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செயல்திறன் மிக்க ஆலோசனைக் குழுவை அமைத்து,
தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















