அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை திமுக தொடங்கி உள்ளதாகவும், பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்கை கணக்கில் கொண்டு அத்தொகுதியில் சீமானை களமிறக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகத்தான் சீர்வரிசை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணன் சீமான் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிகிறது.
மேலும், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால் பிற தொகுதி இடைத்தேர்தல்களிலும் பொது வேட்பாளரை நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















