பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமர்சனம் செய்துள்ளார்…
அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட பாகிஸ்தான் உதவி செய்தது. இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 15-ம் தேதி அறிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன.
இந்த தாமதத்துக்கு பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் இல்லாததே காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். பேச்சு சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க அமெரிக்காவில் இருப்பது போன்ற சட்டம் பாகிஸ்தானில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.டி.வான்சின் இந்த கருத்து பாகிஸ்தானில் பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரம் இல்லாததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அமைதி ஒப்பந்தத்தை மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக கொண்டாடிய வேளையில், அவரது கருத்து பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
















