சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதிக்கு சென்றார். அப்போது, விடுதியில் உள்ள வசதிகள், உணவின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி, விடுதியில் உணவின் தரம், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், விடுதியில் உள்ள குறைகள் பற்றி முதலமைச்சரிடம் அடுக்கடுக்காக மாணவர்கள் புகார் கூறினர். மேலும், விடுதி வார்டன்கள் இழிவாக பேசுவதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினர்.
















