மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், போராட்டத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்தபோது, நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்ற பிறகும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்ந்ததாக அவர் கூறினார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு முன்வந்த போதிலும், ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டினார்.
















