காவிரி, மேகதாது பிரச்னையில் ஒத்துழைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடும் கர்நாடகாவும் நீண்டகால வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்கள் உறவுகளால் இணைக்கப்பட்ட சகோதர மாநிலங்கள் என்றும்,
கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவுக்கு வரவுள்ள தமிழக முதலமைச்சர், கர்நாடக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளையும் கருத்தில் கொண்டு காவிரி விவகாரத்தை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால், தமிழ்நாட்டின் நலன்களை பாதிக்காத வகையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்,
இரு மாநிலங்களுக்கு இடையேயான வரலாற்றுப் பிணைப்பை வலுப்படுத்த முதலமைச்சர் விஜய் உதவுவார் என மனப்பூர்வமாக நம்புகிறேன் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
















