எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? - சிறப்பு தொகுப்பு!
Aug 7, 2026, 12:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 3, 2026, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்பெயின் நாட்டின் எல்லை நகரமான சியூட்டாவுக்குள் (Ceuta) மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாகவும், சுவர்களைத் தாண்டியும் குடியேறியதால் ஐரோப்பிய யூனியனில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவே தனது மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் இந்தியா எதிர்கொள்ளும் நெருக்கடியாகும். இந்தியா எப்படி தனது சொந்த எல்லைப் பாதுகாப்பு மற்றும் அகதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வரலாற்று ரீதியாக, மொராக்கோ குடியேற்றத்தை ஒரு ‘ஆயுதமாகப் பயன்படுத்துகிறது’ என்று குற்றச்சாட்டு உள்ளது.

ஸ்பெயினின் சியூட்டாவின் மொத்த மக்கள் தொகையான 83,000 பேரில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இஸ்லாமியர்கள். சொல்லப்போனால் சியூட்டாவில் இளம் வயதுடைய ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவர்கள் வெறும் 4,000 பேர் மட்டுமே உள்ளனர்.

அதாவது ராணுவச் சேவைக்கு ஏற்ற வயதுடைய சுமார் 80,000 இஸ்லாமியர்கள் மொராக்கோ நாட்டிலிருந்து சியூட்டாவிற்குள் ஊடுருவியுள்ளனர். இது ஒரு முழு அளவிலான இஸ்லாமிய மத ரீதியான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமாக எல்லைத் தாண்டிய குடியேறிகளால் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தேசப் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஒரு நாடு தனது குடிமக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பையோ, பொருளாதார வளர்ச்சியையோ வழங்கத் தவறும்போது, அதன் தவிர்க்க முடியாத விளைவாகவே பக்கத்து நாடுகளுக்குள் சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது.

வட ஆப்பிரிக்காவிற்கு அருகில் ஐரோப்பிய யூனியன் அமைந்துள்ளதைப் போலவே, இந்தியாவும் கடுமையான கட்டமைப்புச் சிக்கல்களை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே ஒரு நிலையான வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாகத் திகழ்கிறது.

1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தல், வறுமை மற்றும் அரசியல் ஸ்திரமின்மையிலிருந்து தப்பி வருபவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய புகலிடமாகவே இருந்து வருகிறது.

இதனாலேயே நாட்டின் மேற்கு எல்லையில் பாகிஸ்தானில் இருந்தும், கிழக்கு எல்லையில் வங்கதேசத்தில் இருந்தும் ஏராளமான அந்நிய நாட்டினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.

இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றத்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொருளாதாரச் சுமை மற்றும் சமூக அமைதியின்மை போன்ற முக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளில் இருந்து ஆவணங்கள் இன்றி நுழையும் இந்த சட்ட விரோத குடியேற்றத்தால் தான் நாட்டில் சமூக அரசியல் பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன.

பாகிஸ்தானுடனான இந்தியாவின் மேற்கு எல்லையானது அதிக ராணுவமயமாக்கப்பட்ட மற்றும் வேலியிடப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது என்றாலும் கிழக்கு எல்லை அப்படியில்லாமல் உள்ளது.

மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வழியாக வங்கதேசத்துடன் 4,096 கிலோமீட்டர் எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. எளிதில் ஊடுருவக்கூடிய வகையில் உள்ள இந்தப் பகுதிகளில் தான் பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றம் நடக்கிறது.

சுமார் 3 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இந்தியாவில் உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. மேற்குவங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி வந்தவுடன் தான் மாநிலம் முழுவதும் பதினொரு தடுப்பு முகாம்களை அமைப்பதன் மூலம், “கண்டறிதல், நீக்குதல் மற்றும் வெளியேற்றுதல்” (detect, delete, and deport) என்ற உத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது.

தனது நில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள இந்தியா, அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவலைத் தடுக்க தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் எல்லைக் காவல்படையைக் கொண்டுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிலிருந்து வரும் சட்ட விரோத குடியேற்றம் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக அமைகின்றன.

எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ட்ரோன்கள், வெப்ப உணரி கேமராக்கள் (thermal cameras) மற்றும் AI சார்ந்த கண்காணிப்பு முறைகளை உள்ளடக்கிய ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’ (Smart Border Project) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கிழக்கு எல்லையில் எல்லை வேலி அமைத்தல், நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைத்தல், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தளவாட ஆதரவு ஆகியவற்றை மத்திய அரசு வேகப் படுத்தியுள்ளது.

சட்டவிரோத ஊடுருவல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சமாளிப்பதில் , இந்திய மாநிலங்களிலேயே அஸ்ஸாம் மாநிலம் மிக விரிவான கொள்கை மாற்றங்களைக் கண்டுள்ளது.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டுச் செயல்முறையுடன், அசாம் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தியது, மத்திய முகமைகளுடனான ஒத்துழைப்பை அதிகரித்தது, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தியது, மற்றும் குடியுரிமை தொடர்பான வழக்குகளைத் தீர்க்கும் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தது என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்குச் சரிபார்க்கப்பட்ட பதிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிக்கும் நடைமுறை, மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகும்.

மொத்தத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் அரசியல் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்படும் எல்லை தாண்டிய ஊடுருவல், வெறும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒரு முக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதே உண்மை.

எனவே வலுவான கண்காணிப்பு அமைப்புகள், மேம்பட்ட உளவுத்துறை தகவல் பகிர்வு மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை கடுமையான சட்டங்கள் ஆகியவை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றன.

Tags: European UnionCeutaSpanish borderwestern and eastern bordersIndiamoroccoBangladesh
Share
Tweet
SendShare
Previous Post

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

Next Post

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies