நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
திரும்பும் திசையெங்கும் கட்டடங்கள் மண்ணில் புதைந்துள்ளதால், மீட்புப் பணி பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் உடல் பாகங்கள் மட்டுமே கிடைப்பதால், அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கிய 290 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 21 பேர் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
















