மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் போக்குவரத்துத் துறை சேவைகள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும்,
இதற்கான வசதி மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை தொடர்பான அனைத்து அலுவலகச் சேவைகளையும் எந்த இடத்திலிருந்தும் பதிவு செய்து பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்.சி-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
















