பெண் ஊழியர்களுக்கு 'எளிமையான வாழ்க்கையை' உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!
Jan 14, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!

- மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் இன்று நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பைத் தொடங்கி வைத்தார்.

மை ஐ.ஜி,ஓடி., கலப்பு நிரல்கள், க்யூரேட்டட் திட்டங்கள் ஆகியவை ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய அம்சங்கள் ஆகும். 12 துறை சார்ந்த திறன் மேம்பாட்டு மின் கற்றல் படிப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங்,

சாமானிய மக்களுக்கு சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

அரசு ஊழியர்கள் டிஜிட்டல் புரட்சியின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் டிஜிட்டல் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக தகவல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் புரட்சியின் திறனைப் பயன்படுத்தி அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.  கர்மயோகி இயக்கம்  அரசு ஊழியர்களை தொழில்நுட்பம் சார்ந்த, புதுமையான, முற்போக்கான மற்றும் வெளிப்படையானவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

‘அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு’ என்பதை பிரதமர் வலியுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.  நல்லாட்சிக்கான திறவுகோல் தொழில்நுட்பம் எனவும் தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது என்று கூறினார். பொறுப்புணர்வு என்பது, நல்ல நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாகும்” என்று கூறினார்.

வளர்ச்சியை நோக்கிய, அனைத்தையும் உள்ளடக்கிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பயணம்தான் முழு அரசு அணுகுமுறை என்று தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் தொடங்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் ‘நிர்வாகத்தை எளிதாக்குவதற்கு’ வழிவகுத்துள்ளன என்று குறிப்பிட்டார்.

அரசுப் பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், பெண்கள்   அரசின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்று  தெரிவித்தார்.

மக்களை மையமாகக் கொண்ட, திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக மத்திய அரசு 2014-ம் முதல் நாடு தழுவிய ‘நல்ல நிர்வாக வாரம் / நாள்’  கொண்டாடி வருகிறது.

Tags: jitendra singhcentral goverment
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் 30-ம் தேதி 15 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!

Next Post

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies