இந்திய ரயில்வே : பெண்களுக்கான 8 சிறப்பு வசதிகள்!
Sep 10, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ரயில்வே : பெண்களுக்கான 8 சிறப்பு வசதிகள்!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் வகையில் இந்திய ரயில்வே சட்டங்களில் பெண்கள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்கப் பல சட்டங்கள் உள்ளது.

அதில் பெண்களுக்கான 8 சிறப்பு வசதிகள் பற்றி பார்ப்போம் :

1. டிக்கெட் இல்லாமல் பயணம் :

ஒரு பெண் ரயில் பயணம் செய்யும் போது இரவில் நேரத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அப்பெண்ணை ரயிலில் இருந்து வெளியேற்ற TTE க்கு அதிகாரம் இல்லை. இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

2. பெர்த் முன்பதிவு :

கர்ப்பிணிப் பெண்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது கீழ் படுக்கையை முன்பதிவு செய்யும் ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு இதே போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

3. டிக்கெட் வாங்குதல் :

நேரில் சென்று பயண சீட்டு வாங்கும் போது பெண்களுக்கென தனி வரிசை இல்லை என்றால், டிக்கெட் கவுன்டர்களில் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. பெண்கள் காத்திருக்கத் தேவையில்லாமல் தனி வரிசை அமைத்து டிக்கெட் வாங்கலாம்.

4. தங்குமிடம் :

பெண் பயணிகளுக்கு விரைவு ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத வகையில் தங்கும் வசதிகள் உள்ளன. சில ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி வசதிகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் பெண் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

5. முன்பதிவு பெட்டி :

விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு, அதே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பெண்கள் பயணிக்க கூடிய வசதிகள் உள்ளது.

6. பெண்கள் மட்டுமே செல்லும் ரயில்கள் :

இந்தியாவில் பெண்கள் மட்டுமே இயக்கும் பெண்களுக்காக தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள்ளும் உள்ளது.
இதுபோன்ற ரயில்கள் உள்ளனவா என்பதை ரயில்வே அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெண் பயணிகள் கேட்டறிந்துகொண்டு பயன்பெறலாம். இந்த சிறப்பு ரயில்கள் பெண் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

7. காத்திருக்கும் பகுதிகள் :

இந்தியாவில் உள்ள பல ரயில் நிலையங்களில், பெண் பயணிகளுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் தனித்தனி காத்திருப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

8. உதவி எண் :

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவர்கள் 182 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து உதவி கேட்கலாம்.

Tags: Indian Railways: 8 special facilities for women!
ShareTweetSendShare
Previous Post

சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

உலகின் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா எந்த இடம்?

Related News

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies