AI-யை களமிறக்கிய மத்திய அரசு : 80 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு - சிறப்பு கட்டுரை!
Apr 29, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

AI-யை களமிறக்கிய மத்திய அரசு : 80 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Dec 16, 2024, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 85 லட்சத்துக்கும் அதிகமான போலி மொபைல் இணைப்புகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை துண்டித்துள்ளது. சைபர் மோசடியை எதிர்த்து போராடுவதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொழில்நுட்ப ரீதியாக உலகம் வேகமாக வளர்ந்து வருவதால், இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடி செய்வதற்கான மென்பொருள்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் சைபர் மோசடிகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தகவலின் படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரலுக்கு இடைபட்ட காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,750 கோடி ரூபாய், சைபர் மோசடி மூலம் திருடப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதம் நிதி மோசடிகள் ஆகும். மேலும், அதே காலகட்டத்தில், முதலீட்டு மோசடிகளில் தொடர்பாக மொத்தம் 4,599 புகார்கள் வந்துள்ளன.

தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில காவல்துறை ஆகியவை இணைந்து சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சைபர் மோசடி செய்பவர்களின் வலைத் தளங்களை அகற்றி, டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே, இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தைஉருவாக்கியுள்ளது. இந்த நுண்ணறிவு தளம், நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு, தகவல் பரிமாற்றம், தரவுகள் பாதுகாப்பான ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது.

உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், சைபர் குற்றங்களில் பல மொபைல் கைபேசிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, இந்த கைபேசிகளில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்தது.

கடந்த மே மாதம், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் சுமார் 28,200 கைபேசி எண்களைத் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும், குறிப்பிட்ட இந்த கைபேசி எண்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யவும், தகுதியற்ற இணைப்பை துண்டிக்கவும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இந்நிலையில், மக்களவையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை அல்லது சைபர் கிரைம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சத்ரா சேகர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட 78.33 லட்சம் மொபைல் இணைப்புகள் உட்பட 85 லட்சம் மொபைல் இணைப்புகளைத் துண்டித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

போலி ஆவணங்களில் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளை அடையாளம் காண AI- அடிப்படையிலான கருவியை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே, மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கான KYC-யை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, தொலை தொடர்பு நிறுவனம் சார்பாக, சிம் கார்டுகளை வழங்கும் franchisees, distributors, மற்றும் agents என அனைவரையும் முறையாக பதிவுசெய்யும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

பயோமெட்ரிக் முறையில், சிம் கார்டுகள் விற்கப்படும் வணிக இடம் மற்றும் உள்ளூர் முகவரி ஆகியவை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிம சேவைப் பகுதிகளில் காவல்துறையினரின் ஒப்புதல் பெற்றே சிம் கார்டு வழங்க வேண்டும் என புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மொபைல் சந்தாதாரர்களும் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், வரும் ஜனவரி 31ம் தேதிக்குப் பிறகும், பதிவு செய்யாமல் வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொண்டால், அந்த ஏஜென்சிக்கு ஒரு மொபைல் இணைப்புக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பழைய சிம் கார்டுகளை மாற்றவும் மிகவும் கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் காகித அடிப்படையிலான KYC நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Cyber ​​fraudsCyber ​​Crime Coordination CentreSecurityfake documentsDepartment of Telecommunications85 lakh fake mobile connections disconnected
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! – ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Next Post

இனி அலைச்சல் இல்லை : ATM மூலம் எளிதாக PF பணம் எடுக்கலாம் – சிறப்பு கட்டுரை!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies