சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!
Jan 14, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள நியோமா விமானப்படை தளத்தின் சிறப்பம்சங்கள் என்ன ? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு விரிசல் கண்ட இந்தியா – சீனா உறவு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் மலர்ந்தது. இதன்படியே, இருநாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

ஆனால், ராணுவ விவகாரத்தில் காலை வாரியே பழக்கப்பட்ட சீனா மீது இந்தியா எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதன் காரணமாகவே, கிழக்கு லடாக்கில் உலகின் மிக உயரமான நியோமா விமானப்படை தளத்தை இந்தியா செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை சீனா கட்டி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமானது. வீரர்கள் முகாம், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை தளங்கள், ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் இந்த விமான தளத்தைச் சீனா உருவாக்கி வருகிறது.

மேலும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியிலும் மற்றொரு ஏவுகணை தளத்தை சீனா அமைத்து வருவது இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது தவிர, இந்தியாவை நோக்கி இருக்கும் ஹோடான், காஷ்கர், கர்குன்சா, ஷிகாட்சே, பாங்டா, யிங்சி ஆகிய விமானப்படை தளங்களிலும் போர் விமானங்களை சீனா குவித்து வைத்துள்ளது. அங்கு இருந்தபடி உளவு பார்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், ட்ரோன் இயங்குதளங்களையும் சீனா அமைத்துள்ளதாகத் தகவல் தெரிய வந்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து சீனாவுக்கு அருகே சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நியோமோ விமானப்படை தளத்தை இந்தியா உயிர்பித்துள்ளது. 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட இந்த விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி ஏ.பி.சிங் முறைப்படி திறந்து வைத்தார்.

போர் சூழல் ஏற்பட்டால், ராணுவ விமானங்கள் எளிதாகத் தரையிறங்க வசதியாக 2.7 கி.மீ., நீளத்திற்கு வலுவான ஓடுபாதை அமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதுதவிர, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உட்படஅனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நியோமா படைத்தளத்தில் இடம்பெற்றிருப்பது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலம்.

படைகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை விரைவாகக் குவிக்கும் வகையில் நியோமா விமானப்படை தளம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ, டெம்சோக் மற்றும் டெஸ்பாங் பகுதிகளுக்கு, இங்கு இருந்தபடி படைகளை எளிதாக நகர்த்திச் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.

லே, கார்கில் மற்றும் டவுலத் பெக் ஓல்டி ஆகிய படைத்தளங்கள் வரிசையில், நியோமா விமானப்படை தளமும் இந்தியாவின் பலத்தை கூட்டியிருப்பதால், சீனாவிற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும் எனப் பெருமிதம் தெரிவிக்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.

Tags: PM ModiIndiachinaindian armyindian airforceNEWS TODAYIndia has scared China: Neoma Air Force Base at an altitude of 13700 feet!
ShareTweetSendShare
Previous Post

18,000 அடி உயரத்தில் சோதனை வெற்றி : போர்க்களத்தை அமர்க்களப்படுத்தும் “BvS-10 சிந்து”

Next Post

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies