சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள நியோமா விமானப்படை தளத்தின் சிறப்பம்சங்கள் என்ன ? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு விரிசல் கண்ட இந்தியா – சீனா உறவு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் மலர்ந்தது. இதன்படியே, இருநாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

ஆனால், ராணுவ விவகாரத்தில் காலை வாரியே பழக்கப்பட்ட சீனா மீது இந்தியா எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதன் காரணமாகவே, கிழக்கு லடாக்கில் உலகின் மிக உயரமான நியோமா விமானப்படை தளத்தை இந்தியா செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை சீனா கட்டி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமானது. வீரர்கள் முகாம், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை தளங்கள், ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் இந்த விமான தளத்தைச் சீனா உருவாக்கி வருகிறது.

மேலும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியிலும் மற்றொரு ஏவுகணை தளத்தை சீனா அமைத்து வருவது இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது தவிர, இந்தியாவை நோக்கி இருக்கும் ஹோடான், காஷ்கர், கர்குன்சா, ஷிகாட்சே, பாங்டா, யிங்சி ஆகிய விமானப்படை தளங்களிலும் போர் விமானங்களை சீனா குவித்து வைத்துள்ளது. அங்கு இருந்தபடி உளவு பார்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், ட்ரோன் இயங்குதளங்களையும் சீனா அமைத்துள்ளதாகத் தகவல் தெரிய வந்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து சீனாவுக்கு அருகே சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நியோமோ விமானப்படை தளத்தை இந்தியா உயிர்பித்துள்ளது. 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட இந்த விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி ஏ.பி.சிங் முறைப்படி திறந்து வைத்தார்.

போர் சூழல் ஏற்பட்டால், ராணுவ விமானங்கள் எளிதாகத் தரையிறங்க வசதியாக 2.7 கி.மீ., நீளத்திற்கு வலுவான ஓடுபாதை அமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதுதவிர, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உட்படஅனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நியோமா படைத்தளத்தில் இடம்பெற்றிருப்பது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலம்.

படைகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை விரைவாகக் குவிக்கும் வகையில் நியோமா விமானப்படை தளம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ, டெம்சோக் மற்றும் டெஸ்பாங் பகுதிகளுக்கு, இங்கு இருந்தபடி படைகளை எளிதாக நகர்த்திச் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.

லே, கார்கில் மற்றும் டவுலத் பெக் ஓல்டி ஆகிய படைத்தளங்கள் வரிசையில், நியோமா விமானப்படை தளமும் இந்தியாவின் பலத்தை கூட்டியிருப்பதால், சீனாவிற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும் எனப் பெருமிதம் தெரிவிக்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.

Tags: indian airforceNEWS TODAYIndia has scared China: Neoma Air Force Base at an altitude of 13700 feet!PM ModiIndiachinaindian army
Share
Tweet
SendShare
Previous Post

18,000 அடி உயரத்தில் சோதனை வெற்றி : போர்க்களத்தை அமர்க்களப்படுத்தும் “BvS-10 சிந்து”

Next Post

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies