சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன PL-15E ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய இந்த ஏவுகணைகளை நாடு வானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது.

குறிப்பாக JF-17 போர் விமானம் மூலம் பாகிஸ்தான் ஏவிய PL-15E ரக ஏவுகணைகளில் வெடிக்காத ஒன்று பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் இந்திய விமானப் படையினரால் மீட்கப் பட்டது. சீனாவின் ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாக அமைந்து விட்டது.

அதனால், சீன ஏவுகணையின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் தயாராகி உள்ளது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கண்டறிந்து தடுத்து அழிக்க முடியும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சீனாவிடமிருந்து YL-8E ரேடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தான் வாங்கி இருந்தது.

ஆனால்,ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் இந்த வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டிப் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியாவின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய ‘ஸ்கால்ப் குரூஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் தான், 2025 துணைக் கண்ட மோதலில் வான் மற்றும் ஏவுகணைப் போர்: கண்காணிப்பு மற்றும் விளைவுகள்” என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் JF-17 பிளாக்-III போர் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட சீனாவின் CM-400 ஏவுகணைகளை இந்திய மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பராக்-8 வனப்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் YL-8E ரேடார், நூர் கான், சர்கோதா மற்றும் ஜகோபாபாத்தில் உள்ள முக்கியமான விமானத் தளங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட சீனாவால் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை HQ-9BE மற்றும் HQ-16FE ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், இந்திய ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்று அந்த அறிக்கையில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் தொழில்நுட்பம் ஒரு காகிதப் புலி என்பதை ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா நிரூபித்தது. அதையே ஆஸ்திரேலியாவின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: இந்திய ஏவுகணைIndiachinaIndian missile breaks through China's air defenses: Secret report exposedசீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை
Share
Tweet
SendShare
Previous Post

தேஜஸ் இலகு ரக விமான விபத்திற்கு காரணம் என்ன? – விசாரணை குழு அமைப்பு!

Next Post

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies