அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்திருக்கும் லஞ்ச முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யக் காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய்க்கு பணி நியமன மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் மலையாக மாறியுள்ளது என்றும், 888 கோடி ரூபாயில் தொடங்கிய விஷயம், தற்போது ஆயிரத்து 20 கோடி ஊழலாக உருவெடுத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை மட்டுமே எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறையின் கடிதத்தை இழுத்தடிக்காமல் ஊழல் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















