சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக்கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், வெறும் பொம்மை முதலமைச்சராக இருப்பதாகவும்,
திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் அச்சமடைந்த மாதிரி தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கொலைவெறித் தாக்குதல் நடப்பதை சமூக அநீதி திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும்,
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி முடிந்துவிட்டதாகவும், இதனை திரும்பப் பெற விடியா ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
















