இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் - சிறப்பு தொகுப்பு!
Jun 17, 2026, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ கட்சியுடன் இணைந்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் ? என்று இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடனும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கத்தில் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. ஆதரவாக 298 வாக்குகளும் எதிராக 238 வாக்குகளும் பதிவான நிலையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

இந்நிலையில் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கவுள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசியலமைப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை பாஜக அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் என்பதால் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவைப்பெற பாஜக தீவிர முயற்சியில் இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

முன்னதாக 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மம்தாவுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட TMC சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் TMC உறுப்பினர்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து மக்களவையிலும் 20 TMC உறுப்பினர்கள் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிருப்தி TMC உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பட்டியலுடன் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான சுதீப் பந்தோபாத்யாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, 20 TMC அதிருப்தி மக்களவை உறுப்பினர்களில் 19 பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து தாங்கள் அனைவரும் திரிபுராவை சேர்ந்த நேஷனல் சிட்டிசன் பார்ட்டி ஆஃப் இந்தியாவுடன் (NCPI)இணையவிருப்பதையும், விரைவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கவிருப்பதையும் தெரிவிக்கும் கடிதத்தைக் கொடுத்துள்ளனர்.

20 அதிருப்தி TMC நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘என்சிபிஐ’ கட்சியுடனான உள் இணைப்பை அங்கீகரிப்பதும் அவையில் ஆளும் தரப்பு வரிசையில் (treasury benches) தனி இருக்கைகளை வழங்குவதும் சட்டப்படி மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா கையிலேயே உள்ளது.

சட்டமன்ற அல்லது நாடாளுமன்றக் குழுவை விட, அசல் அரசியல் கட்சிக்கே மேலாதிக்கம் உண்டு என்றும், அசல் கட்சியே மற்றொரு அமைப்போடு இணையும்போது மட்டுமே முறையான இணைப்பு அங்கீகரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி TMC பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TMC யில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் பிளவு காரணமாக மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு மூன்றில் இரு பங்கு என்ற 163 எண்ணிக்கையையும், மக்களவையிலும் 313 என்ற எண்ணிக்கையையும் பாஜக கூட்டணி
பெற்றுள்ளது.

இதன் காரணமாக பல முக்கியமான மசோதாக்கள் எந்தத் தடையும் இல்லாமல் வரும் மழைக் கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: TMCbjp governmentNational Democratic Alliancewest bengal assembly election 2026Constitutional Amendment Bill
ShareTweetSendShare
Previous Post

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வங்கதேசத்தில் ஸ்ரீராமர் அவமதிக்கப்பட்ட விவகாரம் – தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்!

101 நாட்களுக்கு பின்னர் மானாமதுரை ஆகாஷ் உடல் தகனம் – நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!

பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விநியோகத்தில் முறைகேடு – அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வில் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் – பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகள் கைது!

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக அவதூறு – திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

பயிர்க்கடன் விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை பார்த்து முதல்வர் கற்றுக் கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பயிர்க்கடன் விவகாரத்தில் தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies