பிரான்ஸில் ஜி7 மாநாட்டிற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரான்ஸின் எவியானில் நடந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், பாதுகாப்பு, விசா விவகாரம், போர் பதற்றம் குறித்து இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சிறந்த தருணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் எனவும், நல்ல மனிதர் எனவும் அவர் பாராடினார். இந்திய மக்களைப் போன்று அமெரிக்க மக்களையும் பிரதமர் மோடி நேசிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
















