பரபரப்பான அரசியல் சூழலில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார். ஆளுநரின் உரை ஆங்கிலத்தில் சுமார் ஒருமணி நேரம் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதன் பின்னர், ஆளுநர் அர்லேகரின் உரையை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
















