ஆடி மாத முதல் வெள்ளி - அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!
Jul 17, 2026, 07:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர்.

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். இதையொட்டி, ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், வண்டியூரில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதற்காக, விடிய விடிய 350 கிலோ பச்சை மஞ்சளை அம்மியில் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வழிபட்டனர். காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags: adi first fridayVekkaliyamman TempletamilnaduAmman templesSamayapuram Mariamman Temple
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

Next Post

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Related News

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நீட் தேர்வு முடிவு வெளியானது – 11,21,000 மாணவர்கள் தேர்ச்சி!

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies