நாட்டுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன், அடுத்தடுத்த சாதனைகளை படைக்க இஸ்ரோ தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க இஸ்ரோ தொடர்ந்து முயலும் என்றும், எதிர்பார்ப்பதை விட அதிக சாதனைகளை படைப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த ஏவுதல்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
















