டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்” ஆவணப் படத்தில் இடம்பெற்ற பொம்மன் பெல்லி தம்பதியருக்கு விருது வழங்கினார்.
கடந்த வருடம் வெளியான “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்” ஆவணப்படத்திற்கு 95வது அகாதமி விருது விழாவில் சிறந்த ஆவண குறும்பதிற்கான விருதினை மார்ச் 12,2023 ஆம் ஆண்டு வென்றது. இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது.
தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளைப் பராமரித்து வரும் பழங்குடி இனத் தம்பதியராக பொம்மன், பெல்லி ஆகிய இவர்களுக்கும் குட்டியானைகளுக்கும் இடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கும் குறும்படம் “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்”.
நேற்று டெல்லியில் உள்ள ராஷ்ரப்பதி பவனில் யானைக்குட்டிகளைப் பராமரிப்பதற்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து வருகின்ற பொம்மன், பெல்லி தம்பதியரின் சமூக சேவை மற்றும் மனிதநேயத்தையும் பாராட்டி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி சிறப்பித்தார்.