சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமாக என கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவைத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் அந்த வழக்கை, மூன்றாவது நீதிபதி சிபி கார்த்திகேயன் விசாரித்து, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷால் மேத்தா ஆஜராகி,
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை விசாரிக்க வேண்டியது அமலாக்க துறையின் உரிமை மட்டுமல்ல கடமை, அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது தான் விரிவாக விசாரணை செய்ய முடியும் என்ற வாதத்தை முன் வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வமான பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற
26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.