'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Feb 4, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

பாத யாத்திரை, வெறும் அண்ணாமலையின் பாத யாத்திரை அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் பாத யாத்திரை. கூட்டணிக்  கட்சியினரின் பாத யாத்திரை. இது  ஒரு வேள்வி, இது  ஒருதவம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 29, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த   ஒவ்வொரு  வீடுமே  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது என்று  என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடக்க விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளையும் 168 நாட்களில் பாதயாத்திரையாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுக் காலத்தில் தமிழகம் பெற்ற பயன்களை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்து சொல்ல உள்ளார். இந்த பாத யாத்திரையின் தொடக்க விழா நேற்று இராமேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் பாதயாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில் பேசிய அண்ணாமலை,

இந்தப்  பாத யாத்திரை, வெறும் அண்ணாமலையின் பாத யாத்திரை அல்ல. இது ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனின் பாத யாத்திரை. கூட்டணிக்  கட்சியினரின் பாத யாத்திரை. இது  ஒரு வேள்வி, இது  ஒருதவம், இது ஒரு சங்கல்பம்,  சுவாமி விவேகானந்தர்  கன்னியாகுமரியில் இருந்து இராமேசுவரம் வரை நடந்தே வந்தார். அதே போல் அமெரிக்காவிற்குச்  சென்று திரும்பிய  சுவாமி விவேகானந்தர் இராமேசுவரத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர், பாரத மாதா இனி தூங்கப்போவதில்லை என்றார். இந்த வார்த்தையை, மெய்ப்பட வைத்தவர், பிரதமர் நரேந்திர மோடி. இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவைப் பெருமைப்பட வைத்து வருகிறார். கோடிக்கணக்கான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறார். பிரதமர் ஒரு சாதாரண மனிதர், எனவேதான் அவர் சாதாரண மனிதர்களுக்கான ஆட்சியை  நடத்தி வருகிறார். தமிழகத்திற்கு இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.

மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார், தமிழை நேசிக்கிறார், திருக்குறளை உலகம் எங்கும் எடுத்துச்செல்கிறார். திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதனை 100 மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தி இருக்கிறார் .

தமிழகத்தில் பிரதமரின் நலத்திட்டங்களால் பயனடைந்த  ஒவ்வொரு வீடுமே  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரியாக உள்ளது.  கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவைத்  தன் மூச்சாக கொண்டுச்  செயல்படுகின்ற நாம் பிரதமர் நரேந்திர மோடி, 2024 ல்  மீண்டும் பிரதமராக வர வேண்டும். 3-வது முறை அவர் பிரதமராக அமரும் போது இந்தியா 3-வது பொருளாதார நாடாக உயரும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்தப் பாத  யாத்திரைக்குத்  தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. மாற்றும் . இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் புற்றுநோயால் பெண்களே அதிகம் இறந்துள்ளனர்.

Next Post

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Related News

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies