லோக்மான்ய திலக் விருது தொகை - தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!
Feb 17, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லோக்மான்ய திலக் விருது தொகை – தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!

லோக் மான்ய திலக் விருது பெற்ற பாரதப் பிரதமர் மோடி, விருதுக்கான தொகையை  தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கினார்.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர் திலகரின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில் லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அவரின் 103-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும் என்று திலகர் நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக் கொண்டுப்  பேசிய பிரதமர் மோடி, “இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த மதிப்புமிக்க விருதை இன்று நான் பெறும்போது, உற்சாகமாகவும் உணர்ச்சி மிக்கவனாகவும் இருக்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில சம்பவங்கள் மற்றும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது” என்றார்.
மேலும், லோக் மான்ய திலக் விருதை நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பரிசுத் தொகையை தூய்மை கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார். இந்த சூழலில், சரத் பவார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

Next Post

வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Related News

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா இறங்கி வந்த ஈரான்!

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies