லோக்மான்ய திலக் விருது தொகை - தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!
Jul 21, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லோக்மான்ய திலக் விருது தொகை – தூய்மை கங்கை திட்டத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்தர மோடி!

லோக் மான்ய திலக் விருது பெற்ற பாரதப் பிரதமர் மோடி, விருதுக்கான தொகையை  தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கினார்.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர் திலகரின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில் லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அவரின் 103-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும் என்று திலகர் நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக் கொண்டுப்  பேசிய பிரதமர் மோடி, “இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த மதிப்புமிக்க விருதை இன்று நான் பெறும்போது, உற்சாகமாகவும் உணர்ச்சி மிக்கவனாகவும் இருக்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில சம்பவங்கள் மற்றும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது” என்றார்.
மேலும், லோக் மான்ய திலக் விருதை நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பரிசுத் தொகையை தூய்மை கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார். இந்த சூழலில், சரத் பவார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

Next Post

வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Related News

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies