தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
Jul 26, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் வகுப்பது குறித்து நாடு முழுவதுமுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது.

நேற்று மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதலில் நடந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களைச் சேர்ந்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.  மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவில் மக்களைச் சென்றடையும் வகையில் பரப்ப வேண்டும். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஊழல், வாரிசு அரசியல் குறித்து பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இன்று மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பகவத் கராட் மனோஜ் கோட்டாக் அர்ஜூன் ராம் மெக்வால், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags: ModimumbaiModi NDA meetingNDA meeting
ShareTweetSendShare
Previous Post

வீடு தோறும் மூவர்ணக் கொடியேற்ற அஞ்சலங்களில் தேசிய கொடி கிடைக்கும்

Next Post

கனமழை காரணமாக அமெரிக்காவில் விமானச் சேவை பாதிப்பு

Related News

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies