சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Apr 20, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சூளைமேடு அப்துல்லா சாலையில் ஓசியனிக் எடிபிள் இன்டர்நேஷனல் என்கிற தனியார் நிறுனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், கடல் உணவுகள் மற்றும் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப், ஜேம்ஸ் வால்டர், டோமினிக் சேவியர் ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்நிறுவனம் திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சொந்தமாக காய்கறி, பழப் பண்ணை வைத்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ.,, ஐ.ஓ.பி. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 225 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்நிறுவனம் கடன் பெற்ற தொகையை மத்திய அரசு அனுமதி இன்றி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சூளைமேடு தலைமை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான மேற்கு தாம்பரம், வேளச்சேரி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அமைந்தகரை, தியாகராய நகர், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே, இந்நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல வங்கிகளில் 104 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அந்தப் பணத்தையும் இதேபோல முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐ.ஓ.பி. வங்கி சார்பில் சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, இந்நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வங்கியில் கடன் வாங்கிய ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Ed
ShareTweetSendShare
Previous Post

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி

Next Post

ஒடிசாவின் அதிவேக பெரிய துறைமுகம் பாரதீப் துறைமுகம்!

Related News

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies