ராஜஸ்தானுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்க என்.எல்.சி ஒப்பந்தம் !
Jul 4, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்க என்.எல்.சி ஒப்பந்தம் !

300 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்கான நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா லிமிடெட் ராஜஸ்தானுடன் கையெழுத்திட்டுள்ளது

Murugesan M by Murugesan M
Aug 18, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்), 300 மெகாவாட் சூரிய மின்சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிறுவனம் 510 மெகாவாட் சூரிய மின் திட்டத் திறனைப் ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்சாரில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டத் திறன் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்கான இந்த ஒப்பந்தம், என்.எல்.சி இந்தியா லிமிடெட், ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இடையே 2023 ஆகஸ்ட் 17 அன்று ஜெய்ப்பூரில் கையெழுத்தானது. இதில் ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநர் (நிதி) டி.கே.ஜெயின், என்.எல்.சி இந்தியா லிமிடெடின் பொது மேலாளர் டி.பி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தப் பசுமை மின்சாரமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கொள்முதல் இலக்குகளை அடைய உதவும்.

இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் 0.726 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1.40 ஜிகாவாட் உற்பத்தித் திறனைத் தவிர, என்எல்சிஐஎல் இந்தத் திறனை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்துவது இதுவே முதல் முறையாகும். என்.எல்.சி.ஐ.எல் தற்போது 1,421 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030-க்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.

Tags: solarnlc
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் நீர்வரத்து 13,500 கனஅடி அதிகரிப்பு!

Next Post

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies