செம்மண் குவாரி வழக்கு: திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
Jun 19, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செம்மண் குவாரி வழக்கு: திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்மண் குவாரி மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் 60 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கடந்த 2007-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரி ஒப்பந்தத்தைத் தனது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன், லோகநாதன், கோதகுமார் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகச் செம்மண் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, 2012-ம் ஆண்டு,  இதுகுறித்த புகாரின் பேரில், சட்டவிரோதமாகக் கூடுதலாகச் செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உட்பட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சிக்கு  வந்தது.

இதைத் தொடர்ந்து, தங்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதால், வழக்கை ரத்து செய்யவும் முடியாது, விசாரணைக்குத் தடை விதிக்கவும் முடியாது எனக்கூறி, அவரது மனுவைக் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கணக்கில் வராத 81.70 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்ஸி ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும், 41.90 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகையையும் முடக்கியது.

இந்த நிலையில், செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் லோகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், கௌதம சிகாமணி தவிர, பொன்முடி உட்பட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி மனுத் தாக்கல் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த சூழலில்தான், பொன்முடி தவிர்த்து, கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது 90 பக்க குற்றப்பத்திரிகையைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், இக்குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: pomudi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 வெற்றி ! சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்!

Next Post

இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.

Related News

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies