பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்
Sep 6, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் பிரபல செல் போன் கடையில் மத்திய உளவுத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிப்பது இலங்கை. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.

மேலும், போதைப் பொருள் கடத்தும் நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் மத்திய உளவுத்துறை போலீசாரின் ரகசிய விசாரணையில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தி, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய ரகசியமாக திட்டமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையின் முக்கியப் பகுதியான பாரி முனையில் 2-வது கடற்கரை பகுதியான ராயபுரத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மன்சூர் உடன் பிறந்த நியாஸ் மற்றும் கபீர் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில், தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வளங்களை அனுபவித்துக் கொண்டு அந்நிய நாட்டுப் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் துரோகிகளைக் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சோதனையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Next Post

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies