சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Sep 6, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் முதல்வரின் அரசியல் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தாண்டு அம்மாநிலத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், அம்மாநிலத்தில் சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடு என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அம்மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, சிறப்பு அதிகாரி ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வினோத் வர்மா வீட்டில் சோதனை நடந்தபோது, பாதுகாப்புக்காகத் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, துர்க நகரில் உள்ள ஒரு தொழிலதிபர் மஹாதேவ் வீட்டிலும் சோதனை நடந்தது. எதற்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட முறைகேடு தொடர்பாக இச்சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மஹாதேவ் 25 இடங்களில் ஆன்லைன் சூதாட்ட மையங்களை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் மஹாதேவின் மையங்களில் சுமார் 1 மில்லியன் நபர்கள் பந்தயம் கட்டி இருக்கிறார்கள். ஆனால், அவரது ஆன்லைன் செயலியின் செயல்பாட்டுக் குழு, 5,000 ரூபாய் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களது ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரங்களை பயன்படுத்தி, போலி ஆவணங்களை தயார் செய்து 5,000 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

Tags: ED RAID
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்

Next Post

நியூஸ் கிளிக் முதன்மை ஆசிரியருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies