இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!
Oct 30, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், சீட்டுக்கட்டு போல பல வீடுகள் சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியப் பருவமழை, தீவிரமடைந்திருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இடை இடையே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகவும், மழை கொட்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவு, மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரிடர் பாதித்த மாநிலமாக முதல்வர் சுக்விந்தர் சுகு அறிவித்திருக்கிறார். மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 2,022 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த இழப்பு 8,014.61 கோடி ரூபாய் என்று முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீட்டுக்கட்டு போல ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலை அடிவாரத்தில் உள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிவதை காண முடிகிறது. இந்தக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, “இமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு வண்ண (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: himachal pradesh
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

Next Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies