இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!
Sep 18, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், சீட்டுக்கட்டு போல பல வீடுகள் சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியப் பருவமழை, தீவிரமடைந்திருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இடை இடையே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகவும், மழை கொட்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவு, மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரிடர் பாதித்த மாநிலமாக முதல்வர் சுக்விந்தர் சுகு அறிவித்திருக்கிறார். மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 2,022 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த இழப்பு 8,014.61 கோடி ரூபாய் என்று முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீட்டுக்கட்டு போல ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலை அடிவாரத்தில் உள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிவதை காண முடிகிறது. இந்தக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, “இமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு வண்ண (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: himachal pradesh
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

Next Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies