மின்தடை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நிச்சயம் கால அவகாசம் தேவை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்தடை பிரச்னையை போக்க துணை மின் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பெரும்பான்மையான இடங்களில் உள்ளன என்றும், பழைய டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
110 கிலோவாட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய குறைந்தது 2 நாட்கள் ஆகும் என்றும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















