பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகியான அலிசா அப்துல்லா புகாரளித்தார். அதில், யூடிப்பூர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னைப் பற்றியும் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுவதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசிவரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், திருச்சி சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள யூடியூபர் முக்தாரை தேடி வருகின்றனர்.
















