டெல்லிக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த உயர்மட்ட ஆலோசனையின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ‘குளோபல் சவுத்’ அமைப்பின் நலன்களை முன்னெடுப்பதிலும், இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இரு தலைவர்களும் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.
இச்சந்திப்பு இருநாடுகளின் உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
















