திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் மற்றும் பிள்ளையார் நத்தத்தில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
முதலாவதாக ஏ.ஆர் நிறுவனத்தில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனை நேற்றிரவு 7 மணி அளவில் நிறைவடைந்தது. நிறுவன உரிமையாளர் ராஜசேகர் வீட்டில் சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது. சோதனையின் போது ஆயுதம் ஏந்திய மத்திய காவல் படையினர் உடனிருந்தனர்.
















