ரஷ்யா அனுப்பி வைத்த நான்காவது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது.
இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு கவச வாகனம், 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டதாகும். கடந்த 2018ம் ஆண்டு ஐந்து வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.
அதன்படி மூன்று கவச வாகனங்களை ரஷ்யா அனுப்பியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்த பாதுகாப்பு கவச வாகனம் சிறப்பாக செயல்பட்டதால், எஞ்சிய இரண்டு வாகனங்களை விரைந்து அனுப்ப இந்தியா வலியுறுத்தியது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யா அனுப்பிவைத்த 4வது கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது. இது விரைவில் எல்லையில் நிறுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
















