மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்தபோது 8 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
















