டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து - நடந்தது என்ன? : முழு விவரம்!
Sep 5, 2026, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 4, 2026, 10:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி உணவு விடுதி தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அது பற்றிய ஓர் செய்தித்தொகுப்பு.

தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் டெல்லி மாநில அரசின் ‘Bed and Breakfast’ திட்டத்தின் கீழ் உரிமம் பெற்றிருந்த Flourish Stay B&B’ என்ற உணவு விடுதியில் புதன் கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக பரவியதால் புகை மண்டலமாக மாறிய அந்த உணவு விடுதியில் தப்பித்து ஓட மக்கள் முண்டியடித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.

Bed and Breakfast’ திட்டத்தின் கீழ், ஆறு அறைகளை மட்டுமே இயக்க டெல்லி அரசு உரிமம் வழங்கியிருந்த நிலையில், அந்த உணவு விடுதியில் சட்டவிரோதமாக 25 அறைகளை இயக்கி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விதிமீறல் மற்றும் பாதுகாப்புத் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான தீ விபத்து வீடியோ காட்சிகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜுவாலைகளில் இருந்தும், அடர்த்தியான புகையிலிருந்தும் தப்பிக்கும் அவசர முயற்சியாக, இரண்டு பெண்கள் கட்டிடத்திலிருந்து கீழே குதிப்பது தெளிவாக தெரிகிறது.

தகவல் கிடைத்ததும் எட்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இதுவரை 21பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு, உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதாக கூறியுள்ளனர்.

அந்த உணவு விடுதியில் தீ பாதுகாப்புக்கான NOC வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய டெல்லி தீயணைப்புத்துறை தலைவர், அந்த கட்டிடத்தின் அமைப்பே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் தீ பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதிபெறும் வகையில் அமையவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் வேறு பல ஹோட்டல்களிடமும் தீ பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழ்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

டெல்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உயிர்கள் பலியானது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் துயரமான நேரத்தில் டெல்லி அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உறுதியாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: South Delhi.delhi Fire DepartmentMalviya Nagardelhi hotel firetwenty people died"Flourish Stay B&B"
Share
Tweet
SendShare
Previous Post

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

Next Post

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

Related News

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies