முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தநிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மதுபான கடைகள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
















