தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார்.
அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களை தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















