நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார். மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசு உறுதி
தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை
5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதி
















