தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கணக்கில்வராத 37 லட்சத்து 75 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,
இதுதொடர்பாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பொறுப்பு சார் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது பத்திரப் பதிவுக்காக வந்த முதியவரிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாய் குறித்து விளக்கம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், முதியவர் உரிய விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து பணம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல மதுரை அலங்காநல்லூர் அருகே பொதும்பு பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ஆய்வில், கணக்கில் வராத பணம் 11,800 ரூபாய் சிக்கியது.
















