திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசின் முடிவு என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? எனவும் வினவினர்.
இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான அரசின் முடிவு என்ன? என்பது தொடர்பாக தெரிவிக்க அறிவுறுத்தி வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















