திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸ் வெல்லும் இடங்களை திமுக கேட்டதாக அவர் தெரிவித்தார்.
கூட்டணி சரியாக அமையாததால் தான் வெற்றி பெற முடியவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பி தவெக-விற்கு வாக்களித்துள்ளனர் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கவே ராகுல் காந்தி விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
















