8 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மூன்று ஒப்பந்தங்கள், முதலமைச்ர் ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகின.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 18 ஆயிரத்து 600 கோடி முதலீட்டில் 8 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரம் கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கோவையில் 2 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்ட ஒப்பந்தம் மெற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















