இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!
Sep 6, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், சீட்டுக்கட்டு போல பல வீடுகள் சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியப் பருவமழை, தீவிரமடைந்திருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இடை இடையே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகவும், மழை கொட்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவு, மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரிடர் பாதித்த மாநிலமாக முதல்வர் சுக்விந்தர் சுகு அறிவித்திருக்கிறார். மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 2,022 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த இழப்பு 8,014.61 கோடி ரூபாய் என்று முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீட்டுக்கட்டு போல ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலை அடிவாரத்தில் உள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிவதை காண முடிகிறது. இந்தக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, “இமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு வண்ண (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: himachal pradesh
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

Next Post

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Related News

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies