பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!
Sep 13, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் புகழ் பெற்ற திருக்கோவிலான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உள்ளே, பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல திருக்கோவில் நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் குடும்பத்தார், தரிசனம் செய்ய சென்றபோது, கருவறையில் உள்ள சுவாமியின் படத்தை போட்டோ எடுக்க முயன்றதாகப் புகார் எழுந்தது.

இதனிடையே, பக்தர் ஒருவர் பழனி மலைக் கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே, கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என கோவில் நிர்வாகத்திற்கு, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து, திருக்கோவிலுக்கு வருபவர்கள், மலை அடிவாரம், ரோப் கார் நிலையம், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் திருக்கோவில் அருகே சிறப்புக் கவுண்டர்கள் அமைத்து அங்கு செல் போன் மற்றும் கேமரா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள நடைமுறை போன்றே, சுவாமி தரிசனம் செல்லும் முன், கவுண்டரில் செல் போன் வைத்துவிட்டு, தரிசனம் முடிந்த பின்னர், அதை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags: palani templePalaniPalani MuruganPalanai murugan temple
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Next Post

தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies