பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!
Jun 20, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் புயலினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான புயல் தாக்கியது. இந்த புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில், கரையோரப் பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள், மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் பல்வேறு பகுதிகள் மூழ்கியது. மேலும், அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தக் கடுமையான புயலால் நகரின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உடல் நசுங்கிப் பலியாகியுள்ள நிலையில், 224 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரேசில் நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Tags: brazil stromBrazil
ShareTweetSendShare
Previous Post

முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்

Next Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Related News

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies