பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!
Aug 5, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசில் புயல் : இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் புயலினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான புயல் தாக்கியது. இந்த புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில், கரையோரப் பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள், மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் பல்வேறு பகுதிகள் மூழ்கியது. மேலும், அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தக் கடுமையான புயலால் நகரின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உடல் நசுங்கிப் பலியாகியுள்ள நிலையில், 224 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரேசில் நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Tags: brazil stromBrazil
ShareTweetSendShare
Previous Post

முருங்கை கிலோ ரூ.3 -க்கு விற்பனை – கண்ணீரில் விவசாயிகள்

Next Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies