கீழடி அகழாய்வு பணி: சூது பவள மணிகள் கண்டெடுப்பு!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கீழடி அகழாய்வு பணி: சூது பவள மணிகள் கண்டெடுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 25, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், கீழடி அருகேயுள்ள கொந்தகையில், நான்காம் கட்ட அகழாய்வில், முதுமக்கள் தாழியிலிருந்து இரு சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளில், பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரணப் பொருட்கள், செம்பு நாணயங்கள் உட்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, மக்கள் பார்க்கும் வகையில், கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூபாய் 18 கோடியே 46 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
8 கட்ட அகழாய்வு பணிகளின் தொடர்ச்சியாக, 9-ம் கட்ட அகழாய்வு பணி, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வும், அதன் அருகேயுள்ள கொந்தகையில் 4- ஆம் கட்ட அகழாய்வும் நடைபெற்று வருகின்றன. கொந்தகை அகழாய்வில், ஒரு குழியிலிருந்து 46 சென்டி மீட்டர் ஆழத்தில் கருப்பு, சிவப்பு நிற முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

அந்த தாழியின் உள்ளே 2 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்திலும் இருக்கிறது. அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.

சங்கக் காலத்தில் சூது பவளம் மணிகள் அழகுப் பொருட்கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட சூது பவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: archeologyKELADI
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

Next Post

டாலர் சிட்டி, டல் சிட்டி ஆனது !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies